முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார்: வெங்கையா நாயுடு ட்வீட்

உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டுக்கான தை மாதத்தின் பிறப்பை அறுவடை திருநாளாக பொங்கல் தினமாக உலகெங்கிலும் உள்ள தமிழ் இனம் உற்சாகமாக கொண்டாடியது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.